தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தனித்துவமான உணவுகள்‌ தயாரித்தல்‌ பயிற்சி

உலர்த்துதல்‌- காய்கறிகள்‌, பழங்கள்‌, கீரைகள் மற்றும் மூலிகை, பழரசம்‌-வில்வம், தயார்‌ நிலை பானம்‌ - செம்பருத்தி, சாம்பார் பொடி, ரசப் பொடி ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “தனித்துவமான உணவுகள்‌ தயாரித்தல்‌” பற்றிய பயிற்சி 22.02.2024 மற்றும்‌ 23.02.2024 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மps முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌. கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்‌.

• உலர்த்துதல்‌- காய்கறிகள்‌, பழங்கள்‌, கீரைகள் மற்றும் மூலிகை (Dehydrated vegetables and fruits)

• பழரசம்‌-வில்வம்‌ (Bael Squash)

• தயார்‌ நிலை பானம்‌ - செம்பருத்தி(Hibiscus Ready to Serve beverage)

• சாம்பார் பொடி (Sambar Powder – Moringa leaves)

• ரசப் பொடி(Rasam powder-Thuthuvalai)

• ஆழி விதை இட்லி பொடி ( Flax seed Idly powder)

• சூப் மிக்ஸ் (Soup mix-Greens)

• ஊறுகாய்‌ (Pickle -Banana pseudo stem)

• பழ வகை ஜாம் ( Jam-Fig & dates)

• கீர் மிக்ஸ் ( Kheer mix – Vegetables)

இத்தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1,770 (ரூ.1500 +GST18%) பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌- அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்,‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூ்‌- 641 003.

பேருந்து நிறுத்தம்‌- வாயில்‌ எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராயச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்- 641003. தொலைபேசி எண்‌- 94885 18268, 0422-6611268 மின்னஞ்சல்‌ : [email protected]

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...