மாநகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் வழங்கியது

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் வழங்கப்பட்டது. இதனை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால் துவங்கி வைத்தார். கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 146 குழந்தைகள் படித்து வருகின்றனர். 



இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார் கூறுகையில்; ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் இன்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த மாநகராட்சி ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு முன்னதாகவே ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. 



அந்த நிகழ்ச்சியின் போது இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எங்களிடம் கூறுகையில் எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் இல்லை என்று தெரிவித்தார். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால் இத்திட்டத்தினை எடுத்து ரூபாய் 40 ஆயிரம் செலவில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்களை வழங்கி உதவி செய்தார். அதேபோல் மெர்சி ஹோம், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள், கழிவறை வசதிகள் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளோம்.   



இதனை ஆர்க் பவுண்டேஷன் ஏற்பாடு செய்தது கொடுத்தது. இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் குருதீப் சிங், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால், ஆர்க் பவுண்டேஷன் நிறுவனர் அபர்ணா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 



Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...