கோவையில் கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் சார்பாக காதலர் தினம் கொண்டாட்டம்

கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வேண்டும், ஆவணப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.


கோவை: பிப்ரவரி 14 என்றாலே நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். இந்த நாளில் காதலை வெளிப்படுத்துவதும், வெளிப்படுத்திய காதலுக்கு அங்கீகாரமாக திருமணம் செய்து கொள்வதும் ஆங்காங்கே நடக்கும்.

இந்த நிலையில் கோவையில் புதிதாக காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் உட்பட, காதலுக்கு ஆதரவாக இருப்போர் ஒன்றிணைந்து, காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், அந்த இயக்கத்தின் முக்கிய கிளை அமைப்பான கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் சார்பாக, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், பெரியாரிய உணர்வாளர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டினர்.

இந்த பெரியார் படிப்பகத்தில் சாதி மத பேதமின்றி, 8,000 மேற்பட்ட சாதி மறுப்பு கலப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன.



அவ்வாறு காதலர் திருமணம் செய்து கொண்டவர்களே, கேக் வெட்டி கொண்டாடி, சாதி மத பேதம் ஒழிய காதல் செய்வீர் என முழங்கினர்.



முழக்கத்தின் வாயிலாக, இட ஒதுக்கீட்டுக்கான உரிமை, ஆனவபடுகொலைக்கு எதிராக குழுமிய காதல் தம்பதிகள் உட்பட அனைவரும் முழங்கினர்.

கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வேண்டும், ஆனவபடுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். காதல் என்பது சமூகத்தில் இயல்யான இயற்கையான உணர்வு. அவ்வாறு காதல் செய்து மனம் முடித்தவர்களுக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு, அங்கீகாரம் தர அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...