பொள்ளாச்சி அருகே நவமலை சாலையில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல்

ஒற்றை காட்டு யானை இருசக்கர வாகனத்தை முட்டி தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒற்றை காட்டு யானை பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி தெரிகிறது. இது குறித்து வனத்துறையினர் ஏற்கனவே மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே உள்ள நவமலை சாலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை உலா வந்தது. மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை முட்டி சேதப்படுத்தியது. அந்த ஒற்றை யானை இரு சக்கர வாகனத்தை முட்டி தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



ஒற்றை யானை பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...