கோயம்புத்தூர் ராயல்ஸ் ரோடராக்ட் கிளப் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக ஊஞ்சல்

மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது சக்கர நாற்காலி உடன் சேர்ந்து ஊஞ்சலில் ஏறி ஆடவும், அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே ஊஞ்சல் ஆடும் சந்தோசத்தை அனுபவிக்கும் வகையிலும் இந்த பிரத்தியேக ஊஞ்சல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கோவை: சமத்துவமும் சந்தோசமும் இச்சமுதாயதில் அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் கோயம்புத்தூர் ராயல்ஸ் ரோடராக்ட் கிளப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக ஊஞ்சல் ஒன்றை கோயம்புத்தூர் ரேஸ் கோர்சில் அமைத்துள்ளனர்.



இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது சக்கர நாற்காளியுடன் சேர்ந்து ஊஞ்சலில் ஏறி ஆடலாம். அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே ஊஞ்சல் ஆடும் சந்தோசத்தை அனுபவிக்கும் வகையில் இந்த பிரத்தியேக ஊஞ்சலை வடிவமைத்து உள்ளனர்.

"நாம் சமூகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் ஒருங்கிணைத்து வாழ, இந்த விசேஷமான ஊஞ்சல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று ரோடரக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல்ஹின் பிரேசிடென்ட் நந்தினி ராஜா தெரிவித்தார்.

"மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளை போலவே இயல்பாக நடமாட இந்த ஊஞ்சல் நம் சமுதாயத்தில் ஒரு முதற்படியாக அமையும். இந்த அழகான முயற்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என ரோடராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல்ஹின் செயலாளர் தீனதயாளன் கூறினார்.

ரேஸ் கோர்ஸ், இன்டிகோ டீ ஹவுஸ் எதிரில் நடந்த இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் பொது மேலாளர் பாஸ்கர் சீனிவாசன் கலந்துகொண்டு இந்த பிரத்தியக ஊஞ்சலை திறந்து வைத்தார்.



இந்த திருவிழாவில் ரோடராக்ட உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...