கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நாதக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோரை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.


கோவை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கோவை மண்டல செயலாளர் வகாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலி்ல் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். முன்னதாக பேசிய கலாமணி, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதாக கூறிய அவர், தொழில் துறை சார்ந்த பல்வேறு பிரச்னைகளை தொழில் துறையினர் சந்தித்து வருவதாக கூறினார்.

ஆளும் மத்திய, மாநில அரசுகள் இன்று வரை தீர்வு காணாத நிலையில் நாங்கள், இந்த முறையும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண களம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். கோவை தடாகம் பகுதியில் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.

பொள்ளாச்சி வேட்பாளர் சுரேஷ் கூறுகையில், பொள்ளாச்சியில் தென்னை நார் தொழில் நலிவடைந்து வருகிறது. இதற்கு மத்தியஅரசின் தவறான வரிக்கொள்கையே பிரச்சனைக்கு முக்கிய காரணம். ஜி.எஸ்.டி பிரச்சனைகளால் தொழில் பாதிக்கப்பட்டது. போதிய நிதியை வழங்காததால் மாநில அரசும் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளது. பிரதான பிரச்சனைகளை முன் வைத்து எங்கள் பிரச்சாரம் இருக்கும் என கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...