உடுமலை அருகே சின்னாறு வனப்பகுதியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்னாறு வனப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் ஏற்பாட்டில் கோடந்தூர், பொற்பாற்குடி, ஆட்டுமலை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு உடுமலை தீயணைப்புத்துறை சார்பில் கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.



வனப்பகுதியில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது எனவும், இரவு நேரங்களில் வனவிலங்குகளை விரட்ட தீ பந்தம் போன்றவை பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு வனவிலங்குகளை விரட்ட வேண்டும் எனவும் மலைவாழ் மக்களுக்கு உடுமலை தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஐந்து கிராம மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர்

கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...