கோவையில் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு

காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்டு, ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.


கோவை: கோவை, காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்ட "அருள்மிகு ஶ்ரீ கண்ணனுர் மாரியம்மன் கோவிலுக்கு" மாற்று இடம் ஒதுக்க வேண்டுமென தமிழக சட்ட சபையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்திருந்தார். அதனை, தொடர்ந்து இன்று (பிப்.10) ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.



பின்னர் கோவை தெற்கு தொகுதி 64-வது வார்டு மசால் லே அவுட் வீதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அங்குள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டபட்டு வரும் மருத்துவ கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின் மருத்துவமனையின் புதிய வசதிகள் மற்றும் தேவைகளை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.



மேலும் கோவை தெற்கு தொகுதி 69-வது வார்டு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள அண்ணா தினசரி மார்கெட்டில் புதிதாக வணிக வளாகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...