உடுமலை பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நூற்றுக்கு மேற்பட்ட விளம்பர போர்டுகள் பறிமுதல்

நகர அமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கச்சேரி வீதி, வ.ஊ.சி வீதி, சீனிவாச வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், கூரை தகடுகள், பந்தல்கள் மற்றும் அனுமதி பெறாத விற்பனை வண்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் சீனிவாசா வீதி, பசுபதி வீதி, சத்திரம் வீதி, வ உ சி வீதி, கச்சேரி வீதி, வக்கீல் நாகராஜன், வெங்கட கிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு மற்றும் ராஜேந்திர ரோடு ஆகிய பகுதிகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் தலைமையில், நகர மன்ற தலைவர் மத்தீன முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



அப்போது மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு செய்யப்பட்டு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று நகர அமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கச்சேரி வீதி, வ.ஊ.சி வீதி, சீனிவாச வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், கூரை தகடுகள், பந்தல்கள் மற்றும் அனுமதி பெறாத விற்பனை வண்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் சாக்கடைக்கு வெளியே வைத்திருந்த விளம்பர போர்டுகள், சாலை ஓரம் நீண்ட நாள் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் விளம்பர போர்டுகள் வைத்தால் மீண்டும் பறிமுதல் செய்யபடும் என நகராட்சி அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கபட்டது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....