பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் வரும் 11-ல் தொடக்கம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற 11ஆம் தேதி பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மாநகரில் 2035ஆம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகத்திற்கான ரூபாய்.779 கோடி மதிப்பில் பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டம் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பில்லூர் 3வது திட்டத்துக்காக முருகையன் பரிசல் துறை பகுதியில் ரூபாய் 134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூபாய் 104. 90 கோடி மதிப்பில் 178 எம் எல் டி திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் கட்டன் மலைக்கு தண்ணீர் செல்கிறது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 11ஆம் தேதி பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...