தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து 2024-ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

இந்த ஆண்டுக்கான 10 வகையான பயிர்கள், 10 தோட்டக்கலைப் பயிர்கள் என 20 வகையான பயிர் வகைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி விவசாயிகள் முன்னிலையில் வெளியிட்டார்.


கோவை: கோவை வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் புதிய பயிர்கள் அறிமுகம் செய்து வருகின்றனர்.



அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான 10 வகையான பயிர்கள், 10 தோட்டக்கலைப் பயிர்கள் என 20 வகையான பயிர் வகைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி விவசாயிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான பெரும்பாலான ரகங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு இரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன 2 இரகங்களும், தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட 4 புதிய இரகங்களும், பயறு வகைப்பயிர் பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் தக்கைப்பூண்டு போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டனர்.

தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று பழப்பயிர்கள் பன்னீர் திராட்சை, 5 காய்கறிப்பயிர்கள் கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக் கீரை, சிவப்புக்கீரை மற்றும் பல்லாண்டு முருங்கை வகைகள், சிவப்பு புளி மற்றும் தென்னையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டனர். விவசாயிகள் புதிய ரகங்களை சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...