கோவை போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம்-டாடா நகர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பிப்ரவரி 5 மற்றும் 12 -ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08189) புதன்கிழமை இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கேரள மாநிலம், எா்ணாகுளம்-ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.2) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிப்ரவரி 5 மற்றும் 12 -ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08189) புதன்கிழமை இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

மறு மார்க்கமாக பிப்ரவரி8, 15-ஆம் தேதிகளில் (வியாழக்கிழமை) எா்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்: 08190) சனிக்கிழமை காலை 4.35 மணிக்கு டாடா நகரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், காவாலி, ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, சாமல்கோட், பார்வதிபுரம், முனிகுடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...