போதைப் பொருள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி அங்கலக்குறிச்சியில் மாரத்தான் போட்டி

10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் விக்னேஸ்வரா தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.



போட்டியை ஆனைமலை காவல் ஆய்வாளர் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



இன்றைய காலகட்டத்தில் போதை பழக்கபழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்வை சீரழித்து வருகின்றனர். போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீள வேண்டும், மாணவ மாணவிகள் செல்போனில் மூழ்கிக் கிடப்பதால் ஞாபகத்திறன் குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் தவறாக வரும் பதிவுகளை பார்ப்பதனால் தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது. இதை மாணவ மாணவிகள் தவிர்க்க வேண்டும் என்று மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...