நொய்யலை ஆக்கிரமிக்கும் கழிவுப்பொருட்கள்- தூய்மை பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்

கோவை மாவட்டத்தில் அழியும் தருவாயில் உள்ள பல்வேறு நீர்நிலைகளை தன்னார்வலர்களும், மாநகராட்சியும் இணைந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக கோவையில் சமீபகாலமாக பல்வேறு நீர்நிலைகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.



அதனொரு பகுதியாக கடந்த இருநாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் அருகே நொய்யல் கரையோரம் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் நொய்யல் ஆற்றின் வழித்தடத்தினை ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் புகைப்படமும் கோவை மாநகராட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



இதையறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரி லோகநாதன் மேற்பார்வையின் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த பிளாஸ்டிக், துணிகள், கிழிந்த படுக்கைகள், பாட்டில்கள், பயன்படுத்தப்படாத வீட்டு நுகர்பொருட்கள் போன்ற கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நீர்நிலை மறுசீரமைப்பு தன்னார்வலர் குழுவினர் கூறுகையில், சில மக்களும், தன்னார்வலர்களும் இதுபோன்ற நீர்நிலைகளை காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். நீர் நிலைகளை பாதுகாக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...