பல்லடத்தில் பத்திரிகையாளர் நேசபிரபு கொலை முயற்சி வழக்கில் ஒருவர் சரண்

செய்தியாளர் வெட்டப்பட்டது தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டன். மேலும் இதில், தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன் என்பவர் கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று (பிப்.1) சரணடைந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேச பிரபு. சட்ட விரோதமாக பார் நடத்தியது தொடர்பாக செய்தி வெளியிட்டதால், கடந்த 24ம் தேதி, மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றது.

படுகாயமடைந்த நேச பிரபுவுக்கு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன் 20, கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று (பிப்.1) சரணடைந்தார்.

அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...