கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட துவக்க விழா

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு வைக்கபட்டிருந்த அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.01) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்வேதா சுமன் ஆகியோர் இருந்தனர். பின்னர் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்பொழுது அங்கு வைக்க பட்டுள்ள அரிசி, பருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அரசு பேருந்துகளின் தரம், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, ஓட்டுநர், நடத்துனர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...