உடுலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு- மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தி மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.


திருப்பூர்: உடுமலை உட்கோட்ட காவல்துறை உடுமலை போக்குவரத்து காவல்துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை ஸ்ரீ‌ ஜிவிஜி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை பஸ் நிலையத்தில் துவங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமார் தலைமை வகித்தார். எண்ணம் போல் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் வரவேற்றார். இதில் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.



இதில் அவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தி ஊர்வலமாகச் சென்றனர். உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாதுகாப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாணவிகள் இடையே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி போக்குவரத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக உடுமலை இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் சரவணகுமார், நூலகர் கணேசன்(ப.நி) ஆகியோர் கலந்து கொண்டனர். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் , உறுப்பினர்கள் சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...