பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சடையக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டபூபதி. ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றுக் கொண்டு பொள்ளாச்சி பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு மீண்டும் சடையக்கவுண்டனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஆட்டோ ஓட்டுனரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே நெடுஞ்சாலை துறையினர் அலட்சியத்தால் சாலையில் கொட்டி வைத்த ஜல்லிகற்கள் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி ஓட்டுனர் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் ஆட்டோ ஓட்டுனர்களும், பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்றப்பட்டு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...