உடுமலை அமராவதி நகர் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

குடியரசு தின விழாவில் இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியின் முதல்வர் கே.தீபு நினைவு கூர்ந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுக்காப்புதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ராணுவ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற மாணவர்களின் மிடுக்கான கண்கவர் அணிவகுப்பு ஏற்று கொண்ட பின் பள்ளி முதல்வர் (பொறுப்பு)லெப்டினன்ட் கே.தீபு தேசிய கொடி ஏற்றினர்.

பின்னர் முதல்வர் பேசும் பொழுது, இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை நினைவில் கூர்ந்தார். 75 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அறிவியல் விவசாய மருத்துவ மற்றும் சுகாதாரமாக துறைகளில் தேசத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டினார்.



நம் நாட்டின் 75 ஆம் ஆண்டு கால வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் முன்னோக்கி செல்வதற்கான இலக்கை உணர்ந்து கொண்டு செயல்பட அறிவுறுத்தினார். பின்னர் முதல்வர் அமர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இறுதியாக பள்ளி பேண்ட் அணியின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...