தி.மு.க ஆட்சியில் பத்திரிகையாளர் உயிருக்கே அச்சுறுத்தல் - பா.ஜ.க தேசிய மகளிர் தலைவி வானதி சீனிவாசன் கண்டனம்

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த, 'நியூஸ் 7 தமிழ்' செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு (ஜனவரி 24) அவரது வீட்டுக்கு அருகிலேயே சமூக விரோத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பல்லடம் பகுதியில் நடக்கும் சமூக விரோதச் செயல்களை தனது செய்திகள் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததால் நேசபிரபு தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது. திமுக அரசை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நள்ளிரவில் பெரும் படையுடன் வீட்டு சுவர் ஏறி கைது செய்கிறது காவல் துறை.

ஆனால், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள், கனிமவள கொள்ளை என கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல் துறை கண்டுகொள்வதில்லை. இதற்கு திமுகவினரால் காவல் துறையினர் கைகள் கட்டப்பட்டிருப்பதே காரணம். எனவே, நேசபிரபுவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். நேசபிரபுவுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...