பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் லோகாம்பாள், சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதாக கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...