தமிழ்நாட்டில் முதன்முரையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மருத்துவ சுற்றுலாவிற்க்கு தரமான மருத்துவமனை சான்று


மருத்துவ பயணம் மற்றும்  நலமுடன் ஒரு சுற்றுலா தமிழகத்திற்கு முதல் முறையாக கோவையில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதல் சான்றிதழ்அ மெரிக்காவில் உள்ள எம்டிக்யுயுஏ MTQUA மருத்துவ சுற்றுலாவுக்கு உகந்த மருத்துவமைனகள், கிளினிக்குகள், ஏஜென்சிகள், சிறப்பு மருத்துவ சிகிச்சை மையங்கள், ரிசார்ட்டுகள் போன்றவைகளை ஆராய்ந்து, சான்றிதழ்களை வழங்கி வருகிறது. 

இதற்கான பயிற்சிப்பட்டறை, தர நிர்ணயம் மற்றும் முறைகளையும் வழங்கி வருகிறது. உலகில் மிக சில இடங்களில் மட்டுமே உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் சார்ந்த கல்விமுறைகள் கற்பித்தல் உள்ளன. ஆதாரப்புர்வமான தரநிர்ணயங்களின் அடிப்படையில், மருத்துவ சுற்றுலா பயணத்துக்கான வசதிகளை தரும் நிறுனங்களை தேர்வு செய்து சான்று வழங்குகின்றன. தகவல் தொடர்பு, இயக்கம், பண்பாடு, கலாச்சாரம், சந்தைப்படுத்துதல், இணைய பயன்பாடு, தனிமை காப்பு போன்ற வாடிக்கையாளர்கள் சேவைகளை மதிப்பீடு செய்கிறது. மருத்துவம் மற்றும் சேவை அளிப்போர் தர நிர்ணயத்தின் அளவுக்கோ, அதை விட மேலாகவோ செயல்படுவோருக்கு சான்றுகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிறுவனம், சமீபத்தில் மருத்துவ சுற்றுலா தொடர்பாக உலகத்தரத்திலான பயிற்சி தரவும் சான்றிதழ்  வழங்கவும் புதிய திட்டத்தை உருவாக்கியது.

மருத்துவ பயணம் மற்றும் சுகாதார நலச்சுற்றுலா தர குட்டமைப்பின் நிறுவனர் ஜூலி மன்ரோ பேசுகையில், “மருத்துவ சுற்றுலா பயணிகள், நம்பகமான அளவில் சிகிச்சை தரும் நிறுவனங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குவோரை நாடுகின்றனர். பிற நாடுகளில் தங்களது பாதுகாப்பு, மற்றும் சிறப்பான சிகிச்சை பற்றியும் உறுதியை அளிக்க வேண்டுகின்றனர்.  சிகிச்சை தரும் டாக்டர்களை பற்றியும், மருத்துவமனையின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் சொந்தமாக விசாரித்து அறிய வேண்டியள்ளது. இத்தகைய விசாரணையை அவர்கள் மேற்கொள்வது மிகவும் கடினமானது. இந்நிலையில் சர்வதேச அளவில் சான்று பெற்ற ஆலோசகரால் செய்ய முடியும். மருத்துவ சுற்றுலா துறையில் சான்று வழங்குவது ஒரு மகத்தான மைல்கள் என்றே சொல்லலாம். மாற்று முறை மருத்துவம் விரும்புவோருக்கும் தேடுவோருக்கும் இது ஒரு சிறப்பான வழிகாட்டுதல்," என்றார்.

MTQuA நிறுவனர் மற்றும் தலைவர் ஜூலி டபிள்யு மன்ரோ,  அமெரிக்கா நிதி நிர்வாக முதுநிலை ஆலோசகர்   ஜெனட் எம் கெட்டஸ் ஆகியோர் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 3 நாட்களாக இங்குள்ள வசதிகளை ஆராய்ந்து சான்று வழங்கியுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டிலேயே இத்தகைய சான்றிதழ் பெறும் முதல் மருத்துவமனையாக திகழ்கிறது.  சான்றிதழை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை வர்த்தக அலுவலர் சுவாதி ரோஹித் பெற்றுக் கொண்டார். மருத்துவமனை செயல் அதிகாரி சி.வி ராம்குமார், டீன் சுகுமாறன், மருத்துவ இயக்குனர் டாக்டர் ஐசக் மோஸஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...