கோவை மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவத்தில், சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும், வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு காட்சியளித்தனர்.


கோவை: கோவையில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜனவரி 24) திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.



அதன்படி சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும், வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினர். பின்னர் விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு சுப்ரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு மங்களநாணை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். திருமண கோணத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை பக்தர்கள் வழிபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...