கோவை மாநகராட்சி ஊழியர்கள் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை மாநகராட்சி ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநகராட்சி உதவி ஆணையர் நூர் அகமது, உதவி ஆணையர் மாணிக்கம் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட பழைய தபால்நிலைய சாலையில் பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை அகற்றும் ரோபோடிக் என்ற நவீன இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை தூய்மைப் பணிகள் இன்று நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், இன்று நேரில் ஆய்வு செய்தார்.



பின்னர் பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...