கோவை மாவட்டத்தில் நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் எம்.பி., பி.ஆர்‌.நடராஜன் கோரிக்கை

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.



கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள S வளைவு பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்திட ரவுண்டானா அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தரைப்பாலம் விரிவுபடுத்துவது குறித்தும், சாய்பாபா காலனி பகுதியில் அமைய உள்ள மேம்பாலம் குறித்தும், மாவட்ட ஆட்சியருடன் நாடாளுமன்ற உறுப்பினர் விவாதித்தார். சமீபத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுடன் சாய்பாபா காலனி மேம்பாலம் அமைய உள்ள பகுதியை நேரடியாக ஆய்வு செய்து இருந்தார்.



அது குறித்தும், அப்பகுதியில் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதத்தில் மேம்பாலம் அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சந்திப்பின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜாகீர், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் அளித்த விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...