மறைந்த தங்கையின் நினைவாக அவர் படித்த அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டிக் கொடுத்த அண்ணன் - கணபதி பாளையத்தில் நெகழ்ச்சி

மறைந்த தங்கை மணிமேகலை படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய அண்ணன் முருகேசன், மணிமேகலை படித்த அரசு பள்ளிக்கு கலையரங்கம் ஒன்றை கட்டிக் கொடுத்து, சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி உள்ளார்.


கோவை: கோவை சூலூர் அருகே தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த தனது தங்கை பயின்ற பள்ளிக்கு அவரது நினைவாக கலையரங்கம் கட்டிக் கொடுத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணபதி பாளையம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயின்ற முருகேசன் என்பவர் மணிமேகலை டெக்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தங்கை மணிமேகலையும்

படித்துள்ளனர். இதில் மணிமேகலை பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் எதிர்பாராத விதமாக முருகேசனின் தங்கை மணிமேகலை உயிரிழந்தார்.

மணிமேகலை படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் முருகேசன் எண்ணியுள்ளார். எதிர்பாராத விதமாக தன் தங்கை மணிமேகலை இறந்த காரணத்தினால் அவர் படித்த அரசு பள்ளிக்கு முருகேசன் பள்ளிக்கு கலையரங்கம் ஒன்றை கட்டிக் கொடுத்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி உள்ளார்.



இந்த கலையரங்கம் திங்களன்று திறக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்‌. இது குறித்து பேசிய முருகேசன் இந்த பள்ளியின் முன்னாள் மாணவனாகவும், இந்த பள்ளியில் படித்த என் தங்கையின் நினைவாகவும் இந்த பள்ளியை கட்டிட பராமரிப்பதற்காகவும் பள்ளி குழந்தைகளுக்காக கலையரங்கத்தை கட்டிக் கொடுத்துள்ளேன். இதுபோன்று மற்றவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு செய்ய முன்வந்தால் அரசு பள்ளிகள் மேம்படும் என தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...