சிவில் வழக்கில் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை குனியமுத்தூர் இணை ஆணையர் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் புகார்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை உதவியோடு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு குனியமுத்தூர் காவல் நிலையம் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் புகார் கூறினார்.


கோவை: கோவையில் சிவில் வழக்கில் மாநகர காவல்துறை இணை ஆணையர் ரகுபதி ராஜா தலையிட்டு பொய் வழக்கு போடுவதாக கூறி இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

சண்முகம் என்பவர் கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். சண்முகம் மற்றும் அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் ஆனந்த என்பவரை அணுகி நிலத்தை வைத்து இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால், ஆனந்த், சண்முகத்திற்கு தெரியாமல் நிலத்தை வேறொரு நபருக்கு பத்திரத்தை மாற்றி சண்முகத்தை ஏமாற்றி நிலத்தை விற்பனை செய்துள்ளார்.

பின்னர் சிவானந்தம், சக்திவேல் மற்றும் கனகராஜ் சண்முகத்தை மிரட்டி நிலம் எனக்கு சொந்தம் என்று பிரச்சனை செய்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் சண்முகம் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை உதவியோடு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு குனியமுத்தூர் காவல் நிலையம் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

குனியமுத்தூர் இணை ஆணையர் ரகுபதிராஜா சண்முகம் இடத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் வேலை ஆட்களை மிரட்டி உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அறிக்கை ஒன்று வெளியீட்டார். அதில், சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்று கூறியும், அதனை மீறி தலையிட்டு பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...