புதிய மோட்டார் வாகனம் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பொள்ளாச்சியில் வாகன ஓட்டுனர் கண்டன ஆர்ப்பாட்டம்

இலகு ரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் 3 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாயும், தனிநபர் காப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹிட் & ரன் BNS என்ற வழக்கை பதிவு செய்து அந்த ஓட்டுநருக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநிலத் தலைவர் காளிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலகு ரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் 3 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாயும், தனிநபர் காப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும், பணியில் இருக்கும் ஓட்டுநர்களை தாக்கும் நபர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதோடு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், வெளிமாநிலம் சென்று வரும் ஓட்டுநர்களுக்கு வழிப்பறி கொள்ளையர்களால் உயிர் சேதம் ஏற்பட்டாலோ விபத்து மூலம் உயிர் சேதம் ஏற்பட்டாலோ எந்த மாநிலத்தில் நடக்கிறதோ அம்மாநில அரசு ஓட்டுநரின் உடலை அவரது சொந்த ஊரில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.



மேலும் விபத்து ஏற்பட்டவுடன் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள ஓட்டுநர்களின் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பது, காவல் நிலையத்திற்கு ஓட்டுனர்கள் செல்லும் போது இந்த சட்டத்தை பயன்படுத்தி சில காவல்துறையினர் ஓட்டுநர்களிடம் லட்சக்கணக்கில் கையூட்டு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதனால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் ஓட்டுநர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும், தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...