துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் ரூ.6.80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கீரிட் தளம் பணி தொடங்கி வைப்பு

அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் தலைமை தாங்கி புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து வேலையை தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு சின்னவேடம்பட்டி பகுதி 2வது வார்டு செயலாளர்கள் ஜெயகுமார், காளிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து வேலையை தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அப்போது பெண் தொண்டர் ஒருவர் சட்ட மன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பாடலை பாடினார். இந்த பூமி பூஜையில் அம்மாபேரவை பகுதி செயலாளர் கவிசந்திரமோகன், வார்டு கவுன்சிலர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், பகுதி துணை செயலாளர் சரவணபாண்டியன், துணை செயலாளர் கோமதி, பகுதி அவைத்தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க பகுதி செயலாளர் முருகேஷ், பகுதி வணிக பேரவை தலைவர் செல்வம், 2வது வார்டு அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் திருநாவுக்கரசு, சி.டி.சி பேபி, சி.டி.சி சிவலிங்கம், சி.டி.ஐ கோபி, பாலாஜி, மோகன்ராஜ், மணி, மைதிலி ஜெயந்தி உட்பட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...