கோடநாடு எஸ்டேட்டிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பயணம்

நாளை கோடநாடு எஸ்டேட் வளாகத்தில் ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பூமி பூஜையில் சசிகலா பங்கேற்கின்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை வரை கோடநாடு எஸ்டேட்டில் தங்கி இருக்கும் சசிகலா அதன்பின்பு சென்னை திரும்புகிறார்.


கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஏழு வருடங்களுக்கு பின்னர் இன்று கோடநாடு எஸ்டேட்டிற்கு பயணமானார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். வழக்கு தொடர்பாக சசிகலா சிறைக்கு சென்ற நேரத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சசிகலா சிறையில் இருந்த நேரத்தில் கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு, அங்கு இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் அடிக்கடி ஓய்வெடுக்கும் இடமாக கோடநாடு எஸ்டேட் இருந்து வந்தது. ஒரு மினி தலைமைச் செயலகமாக கோடநாடு எஸ்டேட் இருந்து வந்த நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் உள்ளிட்ட காரணங்களால் சசிகலா அங்கு செல்லவில்லை.

சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் அவர் சென்னையிலேயே வசித்து வந்தார்.



இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் சசிகலா இன்று கோடநாடு எஸ்டேட்டுக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், சாலை மார்க்கமாக கோடநாடு கிளம்பிசெல்கின்றார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்த சசிகலா, நேராக கோடநாடு எஸ்டேட் சென்றார்.

நாளை கோடநாடு எஸ்டேட் வளாகத்தில் ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பூமி பூஜையில் சசிகலா பங்கேற்கின்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை வரை கோடநாடு எஸ்டேட்டில் தங்கி இருக்கும் சசிகலா, சென்னை திரும்புகிறார். வரும் பிப்ரவரி 24 ம் தேதிக்குள் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவை நடத்தவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...