காங்கேயம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் - பாரம்பரிய உடையில் வந்த காவலர்கள்

தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் வைத்து போலிசார் மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-தாராபுரம் சாலையில் காங்கேயம் காவல் நிலையம் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மேலும் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு ஆண் காவலர்கள் சட்டை வேஷ்டியிலும், பெண் காவலர்கள் சேலை அணிந்தும் வந்திருந்தனர். இதில் இரண்டு காவல் நிலைய வளாகங்களிலும் வண்ண கோலமிட்டு பாரம்பரிய முறைப்படி அடுப்புக் கூட்டி, கரும்புகள் வைத்து மண் பானையில் பொங்கல் வைத்து அனைத்து போலிசாரும் இணைந்து பொங்கல் விழாவை உற்சாகமாகவும், மிகச் சிறப்பாகவும் கொண்டாடினர்.

மேலும் உதவி காவல் ஆய்வாளர்கள் சந்திரன், கார்த்திக், கோமதி, மாலா, பாஸ்கர், சத்தியமூர்த்தி மற்றும் காங்கேயம் காவல் நிலைய போலிசார்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...