தடாகம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தடாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டார்.


கோவை: கோவை தடாகம் காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உள்பட அனைத்து காவலர்களும் ஒரே மாதிரியான வேட்டி சட்டை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

கோவை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கணுவாய் அடுத்துள்ள தடாகம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதற்கு தடாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டார். காவல்நிலையத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும் ஒரே மாதிரியான பாரம்பரிய வேட்டி – சட்டை அணிந்து பொங்கலை கொண்டாடினர்.

தொடர்ந்து ஊர்பொதுமக்களுடன் இணைந்து சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கும்போது காவல்துறையினர் பொங்கலோ பொங்கல் என கோசமிட்டனர்.

பின்னர் இலையில் பொங்கல் படையிலிட்டு தேங்காய் உடைத்து சூரிய பகவானுக்கு நன்றி கூறி அனைவரும் சாமி கும்மிட்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவலர்கள் ஆர்வமுடன் கரும்புகளை பல்லால் கடித்து சுவைத்து மகிழ்ந்தனர்.



இதில் எஸ்.ஐ. ஜீவன்ராஜ்துரை, எஸ்.ஐ.ஐயாசாமி, பெரியநாயக்கன்பாளையம் தனிபிரிவு எஸ்.ஐ ஐயப்பன், எஸ்.எஸ்.ஐ அந்தோனிசாமி, தலைமை காவலர்கள் முருகன், முருகேசன், தனிப்பிரிவு போலீஸ் செல்லக்கண்ணு, காவலர்கள் ஜனக்குமார், ராமராஜ், பாலமுருகன், நட்டார், தமிழரசன், குமரேசன், கார்த்திக் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...