துடியலூரில் அனுமனின் திருவீதி உலாவை வரவேற்று முஸ்லீம் மதத்தினர் இனிப்பு வழங்கினர்

அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் கொடுத்து சிறப்பித்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலகலமாக நடைபெற்றது. மாலை ஆஞ்சநேயர் திருவீதி உலா விஸ்வநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



அப்போது, அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் வழங்கி சிறப்பித்தனர்.

இதில், அனுமன் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.



இது விழா குழுவினர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதில் துடியலூர் பள்ளிவாசல் தலைவர் சுல்தான், துணைத்தலைவர் ஷேக் பாவா மகபூப், செயலாளர் அமீர் அப்பாஸ் மற்றும் நிர்வாகத்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கு பெற்றனர். இப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு இதுஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...