உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கலை வரவேற்கும் விதமாக சலகெருது, தேவராட்டம் ஆடிக் கொண்டாட்டம்

பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த கோவிலான உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற மால கோவிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வழிபாடு நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான பெதம்பம்பட்டி, எஸ்.அம்மாபட்டி, லிங்கமாவூர், கொங்கல்நகரம் புதூர், பொட்டயம்பாளையம், சனுப்பட்டி, வல்லகுண்டபுரம், மரிக்கந்தை, கொங்கலகுறிச்சி, வாளவாடி உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் கிராம மக்கள் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதங்களில் இரவு நேரங்களில் காளைகளுடன் சல கெருது, தேவராட்டம் ஆடி வருகின்றனர்.



மேலும் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சலகெருது மறித்தல் எணும் விளையாட்டை ஆடுவார்கள்.



குச்சிகளை நீட்டினால் காளைகள் முட்ட வரும்.



குச்சிகளை குறுக்கே வைத்தால் காளைகள் நிற்கவும் பழக்கி ஆடும் இந்த ஆட்டதோடு இல்லாமல் உருமி இசைகருவி முழுங்க தேவராட்டம், இரட்டையர் தேவாராட்டம் ஆண்கள் ஆடுவார்கள்.



மேலும் பாரம்பரியமான பாடல்களுக்கு பெண்கள் கும்மி ஆட்டம் ஆடையும் தங்களது மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.

பொங்கலுக்கு முன்பு காளைகளுக்கு படையல் செய்து அவற்றை காளைகள் உண்ட பின்பே பொங்கலை கொண்டாட தொடங்கும் கிராமத்தினர் மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த கோவிலான உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற மால கோவிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டுவார்கள்.

முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் காலம் காலமாக இந்த நிகழ்வு தொடர்ந்து வருவதாக கூறும் கிராமத்தினர், கால்நடைகளை தெய்வம் ஆக கருதி வருகிறோம் என்றனர். ஒற்றுமையை வளர்கவும், கொட்டும் பணியை விரட்டவும் சிறந்த உடற்பயிற்சியாகவும் ஆடும் இந்த சலகெருது மறித்தல், தேவராட்டம் உள்ளிட்டவை விவசாயமும், கால்நடை வளர்ப்புமே பிரதானமாக இருந்த காலத்தில் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தில் இரவு தொடங்கி பொங்கல் வரை நள்ளிரவு வரை நிகழ்த்தப்பட்டு வருகிறது என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...