பொள்ளாச்சி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை அப்புறப்படுத்த கோரி சாலை மறியல்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்டர் மீடியங்களை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஆகியோர் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சின்னம்பாளையம், மாக்கினாம்பட்டி, சோலபாளையம் ஊஞ்சவாலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் கிராமங்களுக்கு செல்வதற்கு வழித்தடங்கள் இருந்தது. இந்தநிலையில் திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்டர் மீடியங்களை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகனங்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



எனவே சென்டர் மீடியங்களை அப்புறப்படுத்த கோரி திடீரென உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை திடீரென அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் அடைத்ததால் பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகளால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நான்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சென்டர் மீடியங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



இந்த போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...