துலுக்கனூர் பகுதியில் சாலை போட்டதில் ஒப்பந்ததாரர் முறைகேடு - மக்கள் சாலை மறியல்

மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட துலுக்கனூர் 13-வது வார்டில் சிமெண்ட் சாலை அமைத்ததில் விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதிக்கு 40-மீட்டர் அளவு போடாமல் விட்டு, துலுக்கனூரில் உள்ள கோவில் பகுதிக்கு வரவேண்டிய சாலையை கிழபுறம் உள்ள தனி நபர் பட்டா இடத்திற்கு 4.0 மீட்டர் சாலை போட்டு தனியார் நில உரிமையாளரிடம் பணம் பெற்று ஒப்பந்ததாரர்கள் முறைகேடாக பஞ்சாயத்து பணத்தை செலவு செய்து சாலை அமைத்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் 100-குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது பண்டில் பணமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.



விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதியிலிருந்து உள்ள 40 மீட்டர் கோவிலுக்கு பொதுமக்கள் சாமி கும்பிட்டுச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.



எனவே துலுக்கனூர் நடு வீதியிலிருந்து கோவிலுக்கு கிழக்கே செல்லும் மெயின் பாதையில் 40 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைத்து கோவிலுக்கு பொதுமக்கள் சென்று வழிபாடு செய்யவும், பொதுமக்கள் அவசர தேவைக்கும் தினசரி தேவைக்கும் பயன்பட்டு வரும் மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் துலுக்கனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...