மாணவர்களின் திறமையை கண்டறியும் வகையில் சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் காட் டேலண்ட் ஷோ

போட்டியில் தனி நடனம், குழு நடனம், பாட்டுப்போட்டி, சிலம்பம் போட்டி, பரதநாட்டியம், இசைப்போட்டி, பறை இசை போட்டி, யோகா போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.


கோவை: கோயம்புத்தூர் விழா 2024 பதினாறாவது பதிப்பு ஜனவரி 2ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை கோவையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறியும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ மூலம் மாணவர்களின் திறமைகளை கண்டறியும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோயம்புத்தூர் காட் டெலண்ட் ஷோ 2024 என்னும் மாணவர்களின் திறமைகளுக்கான போட்டிகள் நேற்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்டத்தில் இருந்து நூறுக்கும்க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தனி நடனம், குழு நடனம், பாட்டுப்போட்டி, சிலம்பம் போட்டி, பரதநாட்டியம், இசைப்போட்டி, பறை இசை போட்டி, யோகா போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகளை நடுவர்கள் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ 2024 ஆம் ஆண்டிற்கான பட்டத்தினை வழங்கினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...