கோவையில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அறை திறப்பு விழா

நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர் D 6, கரும்பு கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரும்பு கடை சாரமேடு பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கண்காணிப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



மேலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அவர் கூறுகையில். காவல்துறையினருக்கு ஒரு சிறந்த நல்வழிகாட்டியாக இருப்பது சிசிடிவி காட்சிகள். நடந்ததை நான்கு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுவதை விட, நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக இந்த சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என்றார்.

தொடர்ந்து இன்று 12 கேமரா பொருத்த பட்டு அதனை கண்காணிப்பு செய்யும் அறையை திறந்து வைப்பது, குற்றங்களை முழுமையாக தடுப்பதாக நான் கருதுகிறேன் என்றார். மேலும், செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்டவைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இது மாதிரியான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு முக்கிய நண்பனாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்வில் கரும்புகடை பகுதியின் கவுன்சிலர் அஹ்மத் கபீர், கரும்புகடை பகுதி காவல் ஆய்வாளர் தங்கம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும், தெற்கு உதவி ஆணையர் வீரபாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...