கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 'எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி

'எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் வள்ளலார் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறார்.


கோவை: கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி 18-ஆம் ஆண்டு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 9 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பேச்சாளா்கள் பங்கேற்கின்றனா்.

முதல் நாளான திங்கள்கிழமை அருளாளா் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் பேச்சாளா் பாரதி பாஸ்கா் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, ஆன்மிகத் தொண்டாற்றி வருபவா்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அருள் வளா்செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோவை அரன் பணி அறக்கட்டளையின் தலைவா் அ.தியாகராசன், திருப்பூா் சுப்ரீம் குழும நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன், திருப்பூா் எஸ்பிஎஸ் அன்னையா் இல்ல நிர்வாகிகள் எஸ்பிஎஸ் தாமோதரன், சாவித்திரி தாமோதரன், அன்னூா் ஸ்ரீராமானுஜா் பக்த பேரவையின் செயலா் ஏ.வி.திருமூா்த்தி, புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையார் திருக்கோயில் செயலா் வெங்கிட்டம்மாள் ஐங்கரன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் அருள்வளா் செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்.



நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் அ.நிர்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) வள்ளலார் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...