இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாராபுரம் காவல்நிலையத்தில் திமுகவினர் புகார்

தாராபுரத்தையும் வெள்ளக்காடாக மாற்றத் துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் ஒட்டி உள்ளனர்.


திருப்பூர்: பொய்யான தகவல்களை பரப்பி வரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் இடத்தில் திமுகவினர் புகார் அளித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ரூ.2 கோடி ஊழல். அமராவதி பாசன வயல் நிலங்களை பணத்துக்காக மனை பிரிவுகளாக வகைப்பாடு மாற்றி கூறு போட துடிக்கும் திமுக நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டை வெள்ளக்காடாக ஆக்கியது பற்றாதா. தாராபுரத்தையும் வெள்ளக்காடாக மாற்றத் துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர், அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்.



இதனை பார்த்த திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்து, பொய்யான தகவல்களை பரப்பி வரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் இடத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இதில் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை தவறாக சித்தரித்து பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த நற்பெயர்களை கெடுக்கும் பட்சத்திலும் மேலும் திமுக ஆட்சியை குறை கூறும் பட்சத்திலும் வேண்டுமென்றே இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் செயல்படுவதாகவும், இதனால் நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர மன்ற தலைவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் ரூ 5 கோடியை இழப்பீட்டுத் தொகையாக திருப்பூர் தெற்கு மாவட்ட தாராபுரம் நகர இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தர வேண்டும் எனவும், உரிய சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

காவல் நிலையத்தில் 25 கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்தனர். இதனால் திமுகவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்து மக்கள் கட்சி அலுவலகம் மற்றும் கடைவீதி, அண்ணா சிலை போன்ற முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...