மடத்துக்குளம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

மணி தான் வைத்திருந்த அருவாளை எடுத்து நாகராஜின் பின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பியோடிய மணி என்பவரை கைது செய்து சிறையில் போலிசார் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கணியூர் நல்லா போயன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகன் மகன் நாகராஜ்(39) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இவருடன் கட்டிட வேலை செய்துவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் மிடாப்படியே சேர்ந்த கருப்பு சாமியின் மகன் மணி (43) என்பவர் நாகராஜனுக்கு சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுத்துள்ளார்.

இந்தப் பணம் திரும்ப கேட்கும் பொழுது இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாலை மணி என்பவர் நாகராஜ் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்ட பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணி தான் வைத்திருந்த அருவாளை எடுத்து நாகராஜின் பின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு அருகில் இருந்தவர்கள் வெட்டுப்பட்ட நாகராஜை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.



இது சம்பந்தமாக கணியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட மணி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...