தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை - தமிழக அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை நடைபெறும் நிலையில் தமிழக அரசை கண்டித்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து குறிப்பாக ஒரு சமூகத்தினரை படுகொலை செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து படுகொலை திமுக ஆட்சியில் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டினர்.



தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுத்து எவ்வாறு கொலைகள் நடக்கிறது என்று ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...