தாராபுரம் பகுதியில் மது பிரியர்களால் சுகாதார சீர்கேடு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரத்தில் பாருக்கு தடை செய்யப்பட்டதால் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து மதுக்கடைக்கு முன்பு அமர்ந்து மது குடித்து வருவது பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சிறுநீர் கழித்தும், எச்சில் துப்பியும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகள் முன்பாக மது பிரியர்கள் மது குடிப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் 12 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 3 மது கடை பாருகளுக்கு மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது மது கடைமார்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அனுமதி இல்லை என கூறி டாஸ்மார்க் நிர்வாகம் பார்களை சீல் வைத்து சென்றது இதனால் பாருக்கு தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக மதுபிரியர்கள் வேறு வழியின்றி வெளியில் பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து மதுக்கடைக்கு முன்பு அமர்ந்து மது குடித்து வருவது அந்த வழியில் செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அதே இடத்தில் சிறுநீர் கழித்தும், எச்சில் துப்பியும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கி சாக்கடை போல் இருப்பதாலும் பல்வேறு நோய்கள் டாஸ்மாக் மூலம் பரப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு டாஸ்மார்க் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...