உடுமலையில் அதிகாலை முதல் கனமழை - உழவர் சந்தையில் தேங்கிய மழைநீர்

உடுமலையில் உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் அமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் உழவர் சந்தை பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருது நிலையில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்த காரணத்தால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.



இந்த நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை முன்பு அதிக அளவு மழை நீர் தேங்கியால் காலை வழக்கம் போல் உழவர் சந்தை பகுதிக்கு வந்த விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.



எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உழவர் சந்தை முன்பு மழை நீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...