உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - வாகனம் நிறுத்தம் ஏற்படுத்த கோரிக்கை

பஞ்சலிங்க அருவியில் விசேஷ நாட்களில் தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க கோவில் நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்த காரணத்தால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் தற்பொழுது மழை குறைந்த காரணத்தால் கடந்த இரு தினங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.



தீபாவளியை தொடர் விடுமுறையை முன்னிட்டு பஞ்சலிங்க அருவியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்தனர்.



இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் அதிகளவு வாகன நெரிசல் ஏற்பட்டது எனவே விசேஷ நாட்களில் தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க கோவில் நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.



இதேபோல உடுமலை அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள காந்தளூர் பகுதியில் இறைச்சி பாறை அருவியிலும் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...