உடுமலை தமிழிசை சங்கத்தின் துணைத் தலைவர் நினைவேந்தல் நிகழ்ச்சி

அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.


திருப்புர் :உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரர் வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலையில் நடைபெற்றது.



உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரகா வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலை மிழிசைச்சங்கத்தின் சார்பில் பாரதியார் நூற்றாண்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்தார்.



சங்கத்தின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு. சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

ஆர். கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அரிமா ஆர்.கே. ராமசாமி, அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி செலுத்தினார்.



நல்லாசிரியர் கு.சீ. மணி, பேராசிரியர் முனைவர் செல்வநாயகம், வானொலி தங்கவேல், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் அன்னாரின் சிறப்புகளை கூறிப் புகழ் அஞ்சலி செலுத்தினர். அமரர் வஞ்சிமுத்து ஆசிரியரிடம் பயின்ற மாணவிகள் பானுப்பிரியா, மோகனப்பிரியா மற்றும் ராம் கோடி ராகவி ஆகியோர் தங்கள் ஆசிரியருக்கு இரங்கல் கவிதை படித்தனர்.

முன்னதாக ஆசிரியர் சின்னராசு வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக கல்வியாளர் செ. மூர்த்தி நன்றி கூறினார். சங்க ஒருங்கிணைப்பாளர் அமிர்தநேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அமரர் வஞ்சிமுத்துவின் புதல்வர் சரவணன் ஏற்புரை நிகழ்த்தினார். உடுமலை தமிழிசை சங்கத்தின் நிர்வாகிகள் எஸ். எம். டிராவல்ஸ் நாகராஜ் மற்றும் சத்யம் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அமரர் வஞ்சிமுத்து திருவருவப்படத்திற்கு அனைவரும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...