கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.



இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவிக்கையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகாட்சி பொது நிதியிலிருந்து சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 



மேலும், இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 92வது வார்டு, பாலக்காடு பிரதான சாலை, நரசிம்மபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நரசிம்மபுரம் பகுதியில் உள்ள செங்குளம் மயானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



மேலும், தெற்கு மண்டலம், 92வது வார்டு, பி.கே.புதூர் மற்றும் சுகுனாபுரம் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு  நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்..



இந்நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...