நல்லதங்காள் அணை நீர்வழிப்பாதையில் காற்றாலை மின்கம்பங்கள் - தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லதங்காள் அணை நீர்வழிப் பாதையில் தனியார் காற்றாலை சார்பில் மின்கம்பங்கள் அமைப்பு தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் நல்லதங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் மழை நீர் அதிக அளவில் வரும்போது நீர் வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்கம்பங்கள் மழை நீரில் அடித்துச் சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் நீர்வழி பாதையில் உள்ள கருவேல முட்களை வெட்டி நீர்வழிப் பாதையின் நடுவில் போட்டு வைத்துள்ளனர் மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்தில் கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...