கள்ளக்கிணறு கொலை சம்பவத்தை தொடர்ந்து புதிய சோதனை சாவடி அமைப்பு

தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்லடம் தாராபுரம் சாலையில் புதிய சோதனை சாவடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில் அங்கு புதிய சோதனை சாவடி கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் அவர்கள் ரிப்பன் வெட்டி புதிய சோதனை சாவடியை திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் ADSP ஜான்சன், பொறுப்பு டிஎஸ்பி முத்துரத்தினம், காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோகன், மற்றும் ஊர் மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.



தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...