கோவை மண்டலத்திற்கு கூடுதல் தொழிலாளர் ஆணையர் நியமனம்

கோவை மண்டலத்தின் புதிய கூடுதல் தொழிலாளர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சாந்தி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: புதிய கோவை மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மண்டல தொழிலாளர் ஆணையரகம் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையரகத்தின் கூடுதல் தொழிலாளர் ஆணையராக தமிழரசி பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே அவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கூடுதல் தொழிலாளர் ஆணையராக சாந்தி நியமிக்கப்பட்ட நிலையில், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...